June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பனையேறிப்பட்டியில் பெண் கழுத்தறுத்து கொலை

1 min read

Woman strangled to death in Panayeripatti

1.6.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையேறிபட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையேறிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பரமசிவன் இவருக்கு திருமணமாகி உமா (வயது 37) என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
பரமசிவன் பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் பரமசிவன் தூங்கி எழுந்ததும் அருகில் இருந்த டீ கடைக்கு டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.
அவரது இரு மகன்களும் இரவில் ஊரின் அருகே கபடி மேட்ச் நடந்ததாகும் அதனை பார்த்துவிட்டு தனது வீட்டின் மேலே உள்ள அறையில் தூங்கியதாகவும் உமா மட்டும் கீழே தூங்கி உள்ளார்.
உமா தனியாக கீழே இருப்பதை அறிந்து மர்ம நபர் கத்தியுடன் வீட்டினுள் புகுந்து உமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.
பரமசிவன் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது உமா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பாவூர்சத்திரம் போலீசாருக்கும் தகவல் அளித்த நிலையில் பாவூர்சத்திரம் போலீசார் நேரில் வந்து உயிரிழந்த உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆலங்குளம் டிஎஸ்பி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்டனர். கொலையாளி கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை வீட்டிலிருந்து சிறு தூரத்தில் இருந்த கிணற்றுக்குள் போட்டு சென்றதாகவும் அதனை போலீசார் கைப்பற்றியுள்ள தாகவும் தெரியவந்துள்ளது. கொலை நடந்த வீடு மற்றும் அதன் முன் பகுதியில் தெருவிலும் ரத்த கரைகள் அதிகம் கிடந்துள்ளது. மேலும் கொலையாளியை நெருங்கி விட்டதாகவும் இன்று மாலைக்குள் கொலையாளி கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவூர்சத்திரம் அருகே அதிகாலை வேளையில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.