ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதல்-40 போர் விமானங்கள் அழிப்பு
1 min read
Ukraine’s largest drone attack on Russia – 40 warplanes destroyed
2.5.2025
உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை இன்று நடத்தியிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் இஸ்தான்புல்லில் நடைபெறவிருந்த நிலையில், இந்த தாக்குதல் பதட்டங்களை அதிகரித்துள்ளது.
‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப் ‘ (பாவுடின்) என்ற பெயரில், உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) இந்த மெகா நடவடிக்கையை மிகவும் ரகசியமாக திட்டமிட்டு செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது.
இந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக பெலாயா (கிழக்கு சைபீரியா), பின்லாந்துக்கு அருகிலுள்ள ஆர்க்டிக்கில் உள்ள ஒலென்யா மற்றும் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவ் உள்ளிட்ட பல முக்கிய ரஷிய விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாக உக்ரேனிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்ட ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 அணுகுண்டு குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்ரிட்னி கிராமத்தில் உள்ள தங்கள் ராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்தப் பிராந்தியத்தின் ரஷிய ஆளுநரே உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரக்கு லாரிகளில் பொருத்தப்பட்ட கொட்டகைகளில் டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், டிரோன்கள் ஏவுவதற்காக குறிப்பிட்ட நேரங்களில் லாரிகளின் கூரைகள் தொலைவிலிருந்து திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரஷியாவைப் போல விரிவான ஏவுகணை இருப்புக்கள் இல்லாத உக்ரைன், முக்கிய ஆயுதமாக டிரோன்களையே அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.