June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து சீரானது – குளிக்க அனுமதி

1 min read

Water flow at Courtallam Falls is stable – bathing allowed

2.5.2025
தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த கனமழை மழை சற்று குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது இதனால்
அனைத்து அரு விகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியதால், குற்றாலம் மேற்குத்தொ டர்ச்சி மலைப்பகுதியில் மே மாதம் 3வது வாரத் திலேயே மழை பெய்யத் துவங்கியது. கடந்த 10 நாட்களாக குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரலும், அவ் வப்போது கனமழையாகயும் கொட்டியது. மேலும் வானிலை ஆய்வு மையமும், தென்காசி மாவட் டத்தில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து பெயாத கன மழையினால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

மேலும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை ஆகியவற்றின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 7நாட்க ளாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை குறைந்துள்ளது. நேற்று பகல் முழுவதும் சாரல் இல்லை லேசான வெயில் காணப்பட்டது. குற்றாலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் வேகம் குறைந்தது. இதனால் அருவிகளுக்கு வரும் தண்ணீரும் சீரானது இதனால் நேற்று காலை முதல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை போலீசார் விலக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனு மதிக்கப்பட்டனர். மெயி னருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற் றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. அனைத்து அருவிகளி லும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.