கடையநல்லூர் ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள்
1 min read
Development works in Kadayanallur union area
5/6/2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தென் மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பொதுமக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்க அறிவுறுத்தி உள்ளார்கள். அதனடிப் படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் மேலக் கடையநல்லூர் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்பு மற்றும் தரம், அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும்,
கிருஷ்ணாபுரம் கிராமம் சுலைமான் நகர் பளியர் குடியிருப்பு பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், பழங்குடியினர் நலத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும்.
கடையநல்லூர் வட்டம் பேருந்து நிலைய பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.