June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

யோகா – உலக சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

1 min read

Yoga – Congratulations to students who achieved world records

5.6.2025
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியைச் சார்ந்த மாணவ, மாணவிகள் யோகா மூலம் உலக சாதனை படைத்த நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா அந்த மாணவ மாணவிகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையம் சார்பில் சர்வதேச யோகா தின‌ நிகழ்ச்சியில் மாணவர் மாதவன் (வயது 7) 500 திருக்குறளை 5 யோகாசனம் செய்து கொண்டு ஒப்புவித்தும், சுபாஷினி (வயது 10) உத்திதகூர்மாசனத்தில் 60 வினாடியும், பாலஸ்ரீ (வயது 10) விருச்சிகாசனத்தில் தமிழ் மாதங்கள் எழுதியும், ஜெகதீஷ் முத்துவேல் (வயது 12) பத்ம விருச்சிகாசனத்தில் 150 வினாடிகள் நின்றும், மகேஷ்வரி (வயது 13) விருச்சிகாசனத்தில் ஆத்திசூடி எழுதியும், காயத்ரி (வயது 14) கண்டபேருண்டாசனத்தில் 247 தமிழ் எழுத்துக்கள் எழுதியும் இந்த 6 மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்தனர்

ஊர் பொதுமக்கள் முன்பு செய்யப்பட்ட சாதனையை சோழன் உலக சாதனை நிறுவனத்தினர் உறுதி செய்து சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினர், இதனையடுத்து உலக சாதனை புரிந்த மாணவ மாணவிகள் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா வை சந்தித்து வாழ்த்து பெற வந்த நிலையில் மாவட்ட செயலாளர் சாதனை படைத்துள்ள மாணவ மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து அவர்களை வாழ்த்தினார்,

இந்நிகழ்வின் போது பீனிக்ஸ் யோகா பயிற்சி மைய நிறுவனரும், யோகா பயிற்சியாளருமான மருதுபாண்டி உடனிருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.