வள்ளியூர் அருகே கிரிக்கெட் போட்டியில் நடந்த கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை
1 min read
10 people sentenced to life in the murder case of a cricket match near Valliyur
18/6/2025
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே கூடங்குளம் காவல் சரகம் கூத்தங்குழியில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கூடங்குளம் போலீஸ் ரகம் கூத்தங்குழி கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட விரோதத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், நேற்று திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால் தீரப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினை நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் வழங்கினார்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மொத்தம் 19 எதிரிகளில், 3 பேர் வழக்கின் விசாரணையின் போதே மரணம் அடைந்த நிலையில், மீதமுள்ள 16 பேர் மீது விசாரணை நடைபெற்றது. இதில் 10 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. 6 பேர் விடுதலை செய்யப் பட்டனர்.
ஆயுள் தண்டனை பெற்றோர் விவரம்:
காந்தி (எ) ராஜேந்திரன் (எ)
சிலுவை அந்தோணி (வயது68)
கணேசன் (எ)கணேஷ் (வயது40) சிலம்பரசன் (எ) சிம்பு (வயது39), ஜான் பால் (எ)
ஜேசுவடியான் பால் (வயது 42)
வினோத் (எ) வினோ (வயது 42), சஞ்சய் (எ) அருள் சகாயராஜ் (வயது 44), அன்டன் (வயது 41), ஜேம்ஸ் (வயது 39)
மைக்கேல் (வயது 43)
அந்தோணி மைக்கேல் (வயது 39) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் திறமையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி, நீதிமன்ற புலனாய்வு செய்து, விசாரணை மூலம். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்த வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், வழக்கினை புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கூடங்குளம் காவல் நிலைய காவல் அதிகாரிகள், ஆளிநர்களை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.
2025-ஆம் ஆண்டு கடந்த ஆறு மாதங்களில் மட்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் 13 கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு மரண தண்டனையும், 51 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப் பட்டுள்ளன. மேற்படி தண்டனை பெற்றவர்களில், 14 பேர் சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளி களுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.