தென்காசி புதிய மினி பேருந்துகள் சேவை-அமைச்சர் தொடங்கி வைத்தார்
1 min read
The Minister inaugurated the new mini bus operation in Tenkasi.
18.6.2025
தென்காசியில் புதிய மினி பேருந்துகள் இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் பேசியதாவது:-
பொதுமக்களின் நலன்கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள் குக்கிராமங்கள் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எல்லா பாதைகளும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் வகையில் பொருளாதார மற்றும் சீரான ஒருங்கிணைந்த சாலைப்போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக புதியவிரிவான மினிபஸ் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 54 வழித்தடங்களுக்கு புதியமினி பேருந்து சேவை வழங்க செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டு. இன்றைய தினம் முதற்கட்டமாக 06 புதிய வழித்தடங்களுக்கும் 23 இடம்பெயர்வு அடிப்படையிலான மினிபஸ்சேவை தொடங்கப்படுகிறது. இதில் தென்காசி வட்டாரப்போக்குவரத்து அலுலகத்திற்குட்பட்ட பகுதியில் 6 புதிய வழித்தடங்களும், 4 இடம்பெயர்வு அடிப்படையிலான வழித்தடங்களுக்கும் சங்கரன்கோவில் வட்டாரப்போக்குவரத்து அலுலகத்திற்குட்பட்ட பகுதியில் 19 இடம்பெயர்வு அடிப்படையிலான வழித்தடங்களுக்கும். இத்திட்டத்தினால் தென்காசி மாவட்டத்தில் புதிய மினிபஸ் சேவை வழங்கப்படுகிறது.
மேலும், நீண்ட நாட்களாக பல்வேறு பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து தமிழ்நாடுமுழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் மினிபஸ்சேவையினை 16.06.2025 அன்று தொடங்கி வைத்துள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக இன்று தென்காசி மாவட்டத்தில் கீழ்க்கண்ட 06 புதிய வழித்தடங்களுக்கும் 23 இடம்பெயர்வு அடிப்படையிலான வழித்தடங்களுக்கும் முதற்கட்டமாக மினிபஸ்சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சேவை எந்தப் பகுதிகளுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், விரைவில் அந்தப்பகுதிகளுக்கு கொண்டு வருவதற்கு உரியமுயற்சிகள் எடுக்கப்படும். சில காரணங்களால் பேருந்து சேவை இயக்கமுடியாத பகுதிகளுக்கு விரைவில் உரியநடவடிக்கை மேற்கொண்டு சரிசெய்யப்படும்.
குறிப்பாக, மினிபஸ் இயக்கும் ஓட்டுநர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி இயக்கவும். இ-பஸ்சேவை குறித்ததிட்டத்தினை சிந்தித்தால் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் உணர்வுகளை அறிந்து கொண்டு ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு தான், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, தமிழ்மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பாடுப்பட்டு வருகிறது
இவ்வாறு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் (சங்கரன்கோவில் தென்காசி) செல்வி, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வல்லம் மு.சேக் அப்துல்லா, தென்காசி தொமுச செயலாளர் வல்லம் எம். திவான் ஒலி, தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் கே. என். எல். சுப்பையா, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-I திருராஜன் (வட்டார போக்குவரத்து அலுவலகம், சங்கரன்கோவில்), மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 திருமதி.கனகவள்ளி, (வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆலங்குளம்), மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II மணிபாரதி (வட்டார போக்குவரத்து அலுவலகம், தென்காசி) மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.