செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவு தினம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
1 min read
Vanchinathan’s memorial day at the Red Fort – wreaths laid at the statue and respect paid
18.6.2025
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 114 வது நினைவு தின நிகழ்ச்சியை முன்னிட்டு வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செங்கோட்டை நகர்மன்ற தலைவர் இராமலட்சுமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் எஸ்.எம்.ரஹிம், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் புனிதன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிர மணியன். செங்கோட்டை நூலகர் கோ. இராமசாமி. வீர வாஞ்சிநாதனின் வாரிசு ஹரிஹர சுப்பிரமணியன். பத்மாவதி, வாஞ்சி கோபால கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
செங்கோட்டை பஸ் நிலை யம் அருகில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர் பி.இராம நாதன் தலைமையில் வாஞ்சி நாதனின் தம்பி மகன் ஹரிஹரசுப்பி ரமணியன், அவருடைய மனைவி லெட் சுமி. இவர்களது மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், சுதந்திர போராட்ட தியாகி சாவடி அருணாசலம் பிள்ளை யின் பேரன் ராமலிங்கம். ஆகியோர்
மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் வாஞ்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பி ராமநாதன் ஏற்பாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்ற மாணவி மோனிகாவுக்கு ரூ.12,450 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கணேசன், ஞானராஜ், ஜாகீர்உசேன், முருகன், அங்கப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நகர தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், தலைமையில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் ரஹீம், நகர திமுக அவைத் தலைவர் பி.காளி, நகர துணைச்செயலாளர்கள் எஸ். ராஜா, ஆர்.முத்து சரோஜா நகர பொருளாளர் தில்லை கே.நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் ஆ.பாஞ்ச் பீர்முகம்மது, லெ.சுப்பிரமணி யன், காதர்அண்ணாவி உட்பட பலர் கலந்து கொண்டு
மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமையில் முன் னாள் எம்.எல்.ஏ. வேங்கடரமணன், காங்கிரஸ் தலைவர் ராமர், காங்கிரஸ் தொழிற்சங்க பொதுச் செயலாளர் செங்கை கண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜீவ் காந்தி முருகையா கோதரி பாவா, ஆதிமூலம் இசக்கியப்பன் கோட்டைசாமி,, நடராஜன் ஆதீனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
பாரதிய ஜனதா சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன் உள்ளிட் டவர்களும், இந்து முன்னணி சார்பில் மாவட்ட துணை செயலாளர் முருகன் உள்ளிட் டவர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.