தோரணமலையில் திருமணம் செய்த தம்பதியருக்கு சிறப்பு அர்ச்சனை
1 min read
Special Archana for the couple who got married in Thoranamalai
22.6.2025
தோரணமலையில் தமிழ்மாத கடைசி வெள்ளி தோறும் வருணகலச பூஜை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மே மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் கோடை கொண்டாட்டம் நடந்தது. மேலும் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஆன்மிக நிகழ்ச்சி அல்லது மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இன்று 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சி்கள் நடத்தப்பட்டன. காலையில் வல்லப விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின் கோவிலுக்கு பின்புறம் உள்ள ஆல்-அரச மரத்திற்கு விருட்ச பூஜை நடத்தப்பட்டது. இதனை அடுத்து சப்த சன்னியருக்கு பூஜை நடந்தது.
தோரணமலையில் 27 நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. அந்த செடிகளுக்கு பூஜை நடந்தது. மேலும் தோரணமலையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் வரழைக்கப்பட்டனர். அதோடு தோரணமலை திருமண தகவல் நிலையத்தில் பதிவு செய்தவர்களும் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு கோவில் சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனை நடந்தது. பொதுமக்களும் தங்கள் நட்சத்திரத்திற்கு உரிய விருட்சத்தை வணங்கினார்கள். அர்ச்சனையும் செய்து கொண்டனர். கந்த சஷ்டி கவசம் பராயணம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து சிறுமிகளுக்கான கபடிபோட்டி நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டு விளையாடினர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வழக்கம்போல் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், மதிய உணவு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.