தென்காசி -குற்றாலம்- சிவகிரி அஞ்சலங்களில் யோகாசன தின விழா
1 min read
Yoga Day Celebration at Tenkasi – Kuttrallam – Sivagiri Anjalam
22.6.2025
சர்வதேச யோகாசன விழாவை முன்னிட்டு தென்காசி, குற்றாலம், சிவகிரி, சங்கரன்கோவில், உள்ளிட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் யோகாசன பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
யோகாசனம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் இன்றைய அவசர உலகில் மன அழுத்தத்தை போக்கவும் , உடல் நலம் பேணவும் பெரிதும் உதவும் யோகாசனத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட அனைத்து அஞ்சலங்களிலும் யோகாசன பயிற்சிகள் உலக யோகா தினமான 21.06.2025 அன்று செய்து காட்டப்பட்டன.
குறிப்பாக , சிறப்பு யோசன பயிற்சி நிகழ்ச்சிகளானது , கோவில்பட்டி,சங்கரன்கோவில் தலைமை அஞ்சலங்களிலும் , தென்காசி தலைமை அஞ்சலகம் சார்பாக குற்றாலத்திலும், புதிதாக தொடங்கப்பட்ட சிவகிரி ரிசர்வ் பாரஸ்ட் கிளை அஞ்சலகம் மற்றும் வேம்பார் கடற்கரை ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
மேலும் கிராமப்புற மக்களுக்கும் ,யோகாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கிளை அஞ்சலங்கள் மூலம் பல கிராமங்களில் யோகாசன பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன . இதில் கிளை அஞ்சலக ஊழியர்கள் ,கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம மக்கள் கூட்டாக கலந்து கொண்டு யோகாசன பயிற்சி செய்தனர்.
அஞ்சலங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிகளுக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் மற்றும் அந்தந்த பகுதி அஞ்சலக துணை கண்காணிப்பாளர் , ஆய்வாளர்கள் தலைமை தாங்கினார்கள். அஞ்சல் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகாசன பயிற்சி வகுப்புகள் , பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் இருந்ததாக அனைத்து தரப்பு மக்களும் கருத்து தெரிவித்தனர்.