June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

குண்டாறு பகுதியில் அரசு கேட், சிசிடிவி கேமரா உடைப்பு-3 பேர் கைது

1 min read

Government gate, CCTV camera vandalized in Gundaru area – 3 arrested

23.6.2025
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு பகுதியில் தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையை மூடும் வகையில் வருவாய்த் துறையினர் அமைத்த கேட் மற்றும் சிசிடிவி கேமராக்களை உடைத்து அணையில் வீசிய 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள செங்கோட்டை குண்டாறு நீர்த்தத்தின் மேல் பகுதியில் உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு வணிக நோக்கத்தோடு சில ஜீப் டிரைவர்கள் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், குண்டாறு அணையின் மேல் பகுதியில் உள்ள தனியார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையானது வருவாய் கோட்டாட்சியரால் அடைக்கப்பட்டு கேட் அமைக்கப்பட்டு, அந்த பகுதியை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன

இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் தனியார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள கேட்டை உடைத்து அணையில் வீசியதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக வருவாய்த்துறையினர் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செங்கோட்டையை சேர்ந்த சுரேஷ்குமார், செல்வத்தங்கம், மாரிதுரை ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்தனர்.அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் மூன்று பேர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.