June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் தகவல் தொழில் நுட்ப பணியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

1 min read

Recruitment for the post of Information Technology Officer in Tenkasi

24.6.2025
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பாலின நிபுணர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையம் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றவும், அவர்களின் பாதுகாப்பிற்கான உதவி எண்கள் குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு போன்றவற்றிற்கான விழிப்புணர்வு வழங்கிடவும் செயல்பட்டு வருகிறது. அதில் பாலின நிபுணர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிய கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்படிவத்தினை www.tenkasi.nic.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரம் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்தினை 04.07.2025-க்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

பதவி- பாலின நிபுணர் காலிப் பணியிடம் – 1 படிப்பு சமூகப்பணி மற்றும் சமூகவியல் சார்ந்த பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.முதுகலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பாலின சமத்துவம் சார்ந்த தலைப்புகளில் அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் தேவை. சம்பளம் ரூ.21,000/-
பதவி-தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT), காலிப் பணியிடம் 1 படிப்பு – ஏதேனும் பட்டப்படிப்பு /IT மற்றும் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணப்படுத்தல் மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கையிடல் போன்றவற்றில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா துறைகளில் மாநில அல்லது மாவட்ட அளவில கணினி/ IT போன்றவற்றில் முன் அனுபவம் இருக்க வேண்டும். சம்பளம்- ரூ.20,000/-

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம், 140/5பி ஸ்ரீசக்தி நகர்,தென்காசி மாவட்டம் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.