கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- 3 மாணவர்கள் கைது
1 min read
Law student gang-raped in Kolkata – 3 students arrested
27.6.2025
மேற்கு வங்காள மாநிலம் கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். அந்த மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் ஆவார். மாணவியை கல்லூரிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.