June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் இந்தியாவாம்-பாகிஸ்தான் குற்றச்சாட்டு

1 min read

India behind suicide attack- Pakistan alleges

29.6.2025
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் வசீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தை குறிவைத்து நேற்று முன்தினம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் நிறப்பப்பட்ட காரை கொண்டு ராணுவ வாகனம் மீது மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 10 ராணுவ வீரர்கள், 19 பொதுமக்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.