குற்றாலத்தில் படகு சவாரி- அமைச்சர் தொடங்கி வைத்தார்
1 min read
Boat ride in Courtallam – inaugurated by the Minister
29.6.2025
குற்றாலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாமை தமிழ்நாடு வருவாய் மற்றுஸபேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்து படகு சவாரியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
குற்றாலத்தில் சீசன் காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்வதோடு அவர்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்காக குற்றாலம் =
ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் ஆண்டுதோறும் படகு சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு படகு சவாரியை நேற்று அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்து படகு சவாரியை துவக்கி வைத்தார்.
இந்த விழாவிற்கு தென்காசி மாவட்ட தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் எஸ் அரவிந்த், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெய பாலன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ் பழனி நாடார், சங்கரன்கோவில் ஈ.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருநெல்வேலி உதவி சுற்றுலா அலுவலர் சந்திரகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் குற்றாலம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் குணேஷ்வரன், மண்டல கணக்கு அலுவலர் ராஜேஸ்வரி, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் கஷ்மா, மாவட்ட பஞ் சாயத்து துணை தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன். திமுக மாவட்ட துணை செயலாளர்கள் ழக்கறிஞர் க.கனிமொழி, கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மா.செல்லத் துரை, இலத்தூர் பூ. ஆறுமுகச்சாமி, எஸ். கே. முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், வல்லம் திவான ஒலி ஜே.கே. ரமேஷ். பொன் செல்வன். குற்றாலம் பேரூர் செயலாளர் குட்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ண ராஜா, தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் மு.ஷேக் அப்துல்லா, வட்டார காங்கி ரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள், நகர தலைவர் தென்காசி மாடசாமி ஜோதிடர், பொருளாளர் ஈஸ்வரன், சண்முகவேல், பிரபாகரன், ரமேஷ், சந்தோஷ் ஜார்ஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.