June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் ஊராட்சி பகுதியில் ரூ. 34.70 லட்சம் வளர்ச்சிப் பணிகள்- எஸ்.பழனி நாடார் விளக்கம்

1 min read

Development works worth Rs. 34.70 lakh in Avudaiyanur panchayat area- S.Palani Nadar explains

29.6.2025
தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையானூர் பகுதியில் ரூபாய் 5.5 கோடி செலவில் சாலை பணிகளை துவக்கி வைக்க எஸ்.பழனி நாடார் எம்எல்ஏ வருகை தந்த போது சிலர் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அவுடையானூர் பகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று பொய் புகார் தெரிவித்ததோடு சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவலை பரப்பினார்கள்.

இந்நிலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் ஆவுடையானூர் ஊராட்சி பகுதிக்கு தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி மூலம் செய்துள்ள திட்டப்பணிகள் பற்றி தெரிவித்துள்ளார்.

அதன்படி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்..பழனி நாடார் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆவுடையானூர் ஊராட்சிக்கு செய்த பணிகள் வருமாறு :-

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சியில் கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 18.70 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.

ஆவுடையானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 10 லட்சம் செலவில் பெஞ்ச், டெஸ்க் வழங்குப்பட்டுள்ளது.
ஆவுடையானூர் ஊராட்சி வைத்திலிங்கபுரம் கிராமத்தில்
ரூபாய் 6 லட்சம் செலவில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோக ஏற்கெனவே ஒரு ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து இடப்பிரச்சினை காரணமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது 5.5 கோடி மதிப்பில் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் வீரகேரளம்புதூர் வட்டம், தென்காசி வட்டம் (பகுதி) குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு, ஆயிரப்பேரி(ஆர்.எம்.), மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள்.
தென்காசி (நகராட்சி), சுரண்டை (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி) பகுதிகள் உள்ளன

ஆண்டு ஒன்றுக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியாக 3 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதில் சுமார் 34.70 லட்சம் ரூபாய் ஏற்கனவே ஆவுடையானூர் ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற உள்ள சாலைப் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அமைச்சர்களை பலமுறை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் மாநில அரசின் பொது நிதியில் இருந்து சுமார் 5.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இதையெல்லாம் அறிந்து கொள்ளாத சிலர் தனது அரசியல் விளம்பரத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் இந்த பகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று பொய் தகவலை பரப்பி வருவது மிகவும் தவறானது. இதுபோன்று ஒரு சில நபர்களின் நடவடிக்கைகள் எனது மக்கள் நலப்பணிகளை மறைத்திட முடியாது. எனது பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும்.

இவ்வாறு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.