June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ரூ. 6 கோடியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் – அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

1 min read

The Minister laid the foundation stone of the Tenkasi Panchayat Union Office at a cost of Rs. 6 crores

29.6.2025
தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூபாய் 6 கோடி செலவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன அடிக்கல் நாட்டினார்.

பின்னர் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தென்காசி மதுறைகளின் பல்வேறு துறைகளின் மூலம் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி துறைகளின் மூலம் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்திற்கும்,

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் 50 50 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு ள்ளது. கிளாங்காடு ஊராட்சியில் ரூ.46.25 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலகம் கட்டிடமும், வீ.கே.புதூர் வட்டம் சுரண்டை குறு வட்டத்தில் ரூ.26.29 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 62 பயனாளிகளுக்கு ரூ.68.20 இலட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 22 பயனாளிகளுக்கு ரூ.02.97 இலட்சம் மதிப்பிலான இலவச “இலவச தையல் இயந்திரங்களும் மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.71.17 பயனாளிகளுக்கு ரூ.71.17 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஓட்டுநராக பணிபுரிந்து பணியிடை காலமான ஓட்டுநரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டவருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர்வழக்கறிஞர் க.கனிமொழி, தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் பொறியாளர் க.இ.வேலுச்சாமி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், செயற்பொறியாளர் (சுட்டிடம் மற்றும் பராமரிப்பு) அனிட்டா சாந்தி, உதவி பொறியாளர்கள் இப்ராஹிம், ரஞ்சித், செல்வி.ரமாகோமதி, செல்வி.ராணி, தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம், மற்றும் அரசு அலுவலர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.