“ஓரணியில் தமிழ்நாடு” – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக பிரசாரம்
1 min read
“Tamil Nadu in a nutshell” – Chief Minister M.K. Stalin’s door-to-door campaign
3.7.2025
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. ஆளும் கட்சியாக உள்ள திமுகவும் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்ளும் பணியை திமுக இன்று தொடங்கியுள்ளது.
திமுக தலைவரும் முதல் அமைச்சருமான முக ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு வீடாக சென்று தனது பிரசாரத்தை முன்னெடுத்தார். இதேபோல மாவட்டங்களில் அமைசர்கள், கட்சி நிர்வாகிகள் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ஜூலை 3 ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல வேண்டும். கழகச் செயல்வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பிரசாரம் செய்வதை உறுதி செய்திட வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, அமைச்சர்கள் இன்று வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து அரசின் சாதனைகளை சொல்லி பிரசாரத்தை முன்னெடுத்தனர்.