May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆட்டோ டிரைவரை தாக்கி வழிப்பறி செய்த பெண்கள்

1 min read
Seithi Saral featured Image
Women hit by auto driver

6.3.2020

சென்னையில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.

சென்னை கோபாலபுரம் அருகே நின்றிருந்த 4 பெண்களிடம் அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சவாரி கேட்டுள்ளார். அப்போது திடீரென நால்வரும் ஆட்டோ ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கி அவரிடம் இருந்த பணம் உள்ளிட்ட பொருட்களைப் பறித்துக் கொண்டனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் வழிப்பறிப் பெண்களை விரட்டியபோது 3 பேர் தப்பி விட, சிக்கிய ஒரு பெண்ணை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். தகவலறிந்து இங்கு வந்த ராயப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட பெண் வடபழனியைச் சேர்ந்த புகழ்மதி என்பதும், வழிப்பறி செய்வதையே தொழிலாகக் கொண்டவர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் மேல் விசாரணைக்காக அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆண்களுக்கு பெண்கள் சரி சமம் என்பது சரிதான். வழிப்பறியில் கூடவா…?

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.