June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மறைத்து வைத்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் பாரதீய ஜனதாமீது புகார்

1 min read
Seithi Saral featured Image


Bharatiya Janata Party complains in Supreme Court that Congress is hiding MLAs

18/3/2020

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மறைத்து வைத்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் பாரதீய ஜனதா மீது குற்றம் சாட்டப்பட்டது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியில் இருந்து சிலர் விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்து விட்டனர்.
இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மந்திரிகள் உட்பட 22 எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் பதவி விலகினர். இதனால் முதல்-மந்திரி கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக பாரதீய ஜனதா கூறியது.

இதற்கிடையே கவர்னர் லால்ஜி டாண்டன் 14-ந் தேதி முதல்-மந்திரி கமல்நாத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “சட்ட சபை பட்ஜெட் கூட்டத் தொடர் 16-ந் தேதி தொடங்கும். அன்றைய தினம் எனது உரை முடிந்ததும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் சட்டசபை கூடியது. ஆனால், நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது பற்றி குறிப்பிடப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த கவர்னர், தனது உரையை முழுமையாக வாசிக்காமல், ஒரு பகுதியை மட்டும் வாசித்துவிட்டு வெளியேறினார்.

ஒத்திவைப்பு

பின்னர் கொரோனா வைரஸ் காரணமாக சபையை 26-ந் தேதி வரைஒத்தி வைப்பதாக சபாநாயகர் என்.பி.பிரஜாபதி அறிவித்தார்.

இதையடுத்து, முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்றுமுன்தினம்(திங்கட்கிழமை) ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று(செவ்வாக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய பிரதேச மாநில அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு கோர்ட்டு வழக்கை புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தது.

குற்றச்சாட்டு

இந்த வழக்கு இன்று(புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வக்கீல் அபிஷேக் சிங்கவி மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாரதீய ஜனதா ஒளித்து அடைத்து வைத்துள்ளதாகவும், ஜனநாயக படுகொலை நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

பாரதீய ஜனதா சார்பில் ஆஜரான வக்கீல் முகுல் ரோஹத்கி மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைய தினத்துக்கு(வியாழக்கிழமை) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.