ஆபாசமாக நடிக்க அழைக்கிறாங்க… வருத்தப்படும் ராதிகா ஆப்தே
1 min readகபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் ராதிகா ஆப்தே. ஆனால் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரும் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் பாலியல் ரீதியாக அமைந்ததால் ஆபாச நாயகி என முத்திரை குத்தப்பட்டார்.
அதற்கு ஏற்றாற்போல் அவ்வப்போது மேலாடை இன்றியும், சில சமயம் நிர்வாணமாகவும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதன் விளைவு, பிரபல ஆபாச படத்தில் நடிப்பதற்காக பல தயாரிப்பாளர்கள் ராதிகா ஆப்தேவை அணுகியுள்ளனர்.
கபாலி படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளானார். மேலும் ராதிகா கவர்ச்சி குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, படத்தின் கதைக்கு ஏற்றார்போல் தான் கவர்ச்சி காட்டுவதாகவும். இருந்தாலும் சில தயாரிப்பாளர்கள் என்னை நிர்வாணமாக பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் சில தயாரிப்பாளர்கள் ஆபாச படங்களில் நடிப்பதற்காக தன்னை அழைத்ததாகவும் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.
இதனால் திருந்திய ராதிகா ஆப்தே, இனி கவர்ச்சி அல்லாத வேடங்களில் நடித்து ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நாயகியாக வலம் வருவேன் என சபதம் போட்டுள்ளாராம். முழுசா நனைஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு? என ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.