June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அவசர பயணத்திற்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையாளர் அனுமதி வழங்கும் முறை ரத்து

1 min read
Seithi Saral featured Image

Dasildar cannot grant permission for emergency travel

3/4/2020

பொதுமக்களின் அவசர பயணத்திற்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் அனுமதி வழங்கலாம் என்ற நடைமுறை நீக்கப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவசர பயணம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட் டு உள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களின் அவசர பயணத்திற்கு
வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ரத்து

தற்போது அந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முக‌ம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரடங்கையும் மீறி மக்கள் சாலைக்கு வருவது அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பாஸ் வழங்கலாம் என்ற பழைய நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்கள்

இதனிடையே தமிழகத்தில் எந்த சரக்கு வாகனங்களையும் தணிக்கை செய்யக்கூடாது என்றும் அனுமதி மறுக்கக்கூடாது என்று டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.