தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரிப்பு
1 min read
12.4.2020
தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் – சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.
தமிழகத்தில் 8 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்- தமிழக சுகாதாரத்துறை.
திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.
கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர் – சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கான செலவை அரசே ஏற்கும் – சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.
ஏப்ரல்.15 ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசனை – திமுக.
தமிழகத்தில் மொத்தம் 23 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகங்களும், 9 தனியார் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன – சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை : நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம்.
நோய்த் தொற்று பரவ திமுக தான் காரணமாக இருந்துள்ளது.பேரவைக்கு வந்தால் கொரோனா பரவும்.வெளியே சென்றால் கொரோனா பரவாது.இது தான் ஸ்டாலினின் பாணி – அமைச்சர் ஜெயக்குமார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.
ஈரோடு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தற்போது இடுக்கி மாறியுள்ளது.
டெல்லியில் நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு.
ஈஷா யோகா மையத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை : ஆட்சியர் ராஜாமணி.
வீட்டிலிருந்து வெளியே வரும் நபர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.5,000 அபராதம் அல்லது 3 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அகமதாபாத் நகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட பகுதியை சுற்றி 3 கி.மீ. தொலைவிற்கு எந்த கடைகளையும் திறக்க கூடாது; அடிப்படை தேவைகள் வீடு தேடிச்சென்று வழங்கப்படும் – சேலம் மாநகராட்சி.
சேலத்தில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வசிக்கும் 70 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
கர்நாடகாவில் 10 மாத குழந்தை ஒன்று கொரோனா நோயிலிருந்து பரிபூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது.
சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவிப்பு.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் அவசரகால பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் : வரும் 16,17,18ம் தேதிகளில் நடக்கவிருந்த நேர்முகத் தேர்வு, தொலைபேசி வாயிலாக நடைபெறும் என அறிவிப்பு.
தெற்கு ரயில்வே பல்வேறு நகரங்களிடையே இயக்கி வரும் பார்சல் ரயில் சேவையை ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.