June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இங்கிலாந்தில் ஊரடங்கு காலத்தில் காதலியை சந்தித்த விஞ்ஞானி; பதவியை ராஜினாமா செய்தார்

1 min read

Scientist who met her beloved during the curfew in England; Resigned from the post

7-5-2020

இங்கிலாந்தில் ஊரடங்கு காலத்தில் காதலியை சந்தித்த விஞ்ஞானி நீல் பெர்குசன், அறிவியல் ஆலோசனை அவசர குழுவில் இருந்து ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்தில் .ஊரடங்கு

உலகையே அச்சுறுத்தி வரும்கொரோன எண்ணற்றோரை கொன்று குவித்து உள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 500-ஐ தாண்டி விட்டதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையத்தின் தரவு சொல்கிறது.

ஆனால் இங்கிலாந்தில் பலி எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் அங்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசி பணிகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும்.

விஞ்ஞானியின் காதலி

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு விஞ்ஞானி இரண்டு முறை தனது காதலியை பார்க்கச் சென்றுள்ளார்.

அவரது பெயர் நீல் பெர்குசன் (வயது 51). இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் நிபுணராக இருக்கிறார். இவரது தலைமையிலான “சாகே” என்w அறிவியல் ஆலோசனை அவசர குழு அளித்த மாதிரி திட்டத்தை ஏற்றுத்தான் பிரதமர் போரிஸ் ஜான்சன் Culங்கு கட்டுப்பாடுகளை பிறப்பித்தார்.

எந்த விஞ்ஞானி தலைமையில் இந்த கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டதோ அந்தக் கட்டுப்பாடு அந்த விஞ்ஞானிக்கே பிரச்சினையாக மாறும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

காதலி

விஞ்ஞானி நீல் பெர்குசனுக்கு அன்டோனியா ஸ்டாட்ஸ் என்ற ஒரு காதலி இருக்கிறார். அவருக்கும் திருமணம் ஆகி கணவர், குழந்தைகள் உள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகளோடு வாழும் அந்த பெண்ணுடன்தான் விஞ்ஞானிக்கு காதல் மலர்ந்தது.

ஊரடங்கு காலத்தில் அன்டோனியா ஸ்டாட்சால் தனது காதலரை பார்க்க முடியவில்லை. அவரை காண வேண்டும் என்ற ஏக்கம் நாளுக்குநாள் அதிகமானது.

இதனால் அன்டோனியா ஸ்டாட்ஸ் விதிமுறைகளை மீறி வீட்டை விட்டு வெளியேறி, காதலர் நீல் பெர்குசனின் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரை பார்த்து பின்னர் தனது வீட்டிற்கு வந்துவிட்டார். இப்படி கட்டுப்பாட்டை மீறி 2 முறை சென்று தனது காதலரை சந்தித்து இருக்கிறார்.

விஞ்ஞானி நீர் பெர்குசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2 வாரங்கள் தனிமையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குணம் அடைந்த பின்னர்தான் அவரை காதலி சந்தித்துள்ள்ளார். ஆனாலும் ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாட்டை மீறி சென்றது குற்றம் என்று அந்த நாட்டில் இருந்து வெளிவரும் ‘டெய்லி டெலகிராப்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

ராஜினாமா

இந்த பிரச்சினை இப்படி பூதாகரமானதை அடுத்து , விஞ்ஞானி நீல் பெர்குசன், அறிவியல் ஆலோசனை அவசர குழுவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.

அவர் தனது காதலி அன்டோனியா ஸ்டாட்ஸ் அவரது வீட்டில் இருந்து வெளியேறி, லண்டனில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சென்றதை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான் செய்த தவறை ஒப்புக்கொள்கிறேன். எனவே நான் அறிவியல் ஆலோசனை அவசர குழுவில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “நான் கொரோனா வைரஸ் தாக்கிய பின்னர் நோய் எதிர்ப்புச்சக்தியை பெற்றுவிட்டேன் என்ற நம்பிக்கையில் அவ்வாறு நடந்து கொண்டேன். கொரோனா வைரஸ் சோதனையில் எனக்கு பாதிப்பு இருப்பது உறுதியானவுடன் 2 வார காலம் தனிமைப்படுத்திக்கொண்டேன். ஆனாலும் இந்த சந்திப்புக்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

வரவேற்பு

இவரது பதவி விலகலை இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் புரோக்கன்ஷயர் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “மூத்த விஞ்ஞானி நீல் பெர்குசன் சரியான முடிவை எடுத்துள்ளார். அரசு தொடர்ந்து அறிவியல் ஆலோசனை அவசர குழு கூறுவதை கேட்கும். எங்களிடம் தொடர்ந்து பல நிபுணர்கள் உள்ளனர்” என குறிப்பிட்டார்.

மருத்துவ அதிகாரி

ஏற்கனவே ஸ்காட்லாந்தில் டாக்டர் கேதரின் கேல்டர்வுட் என்ற பெண் மருத்துவ அதிகாரியும், ஊரடங்கு விதிமுறையை மீறி தனது வீட்டுக்கு 2 முறை சென்றுள்ளார், இதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பி அவரும் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.