இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56,342 ஆக உயர்வு; 1886 பேர் சாவு
1 min read
India’s Coronal Influence rises to 56,342- 1886 people died
8-5-2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை1886 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு
கொரோனா பரவலை தடுக்க இந்தியா எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும் அது வேகமாக பரவி வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை தினமும் கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதேபோல் இன்றும்(வெள்ளிக்கிழமை) கொரோனா தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
1886 பேர் சாவு
இந்தியாவில் இதுவரை1886 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16540 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 17974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 694 பேர் இறந்துள்ளனர். குஜராத்தில் இதுவரை 7012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்து டெல்லியில் 5980 பேருக்கும், தமிழகத்தில் 5409 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3252 பேருக்கும், ராஜஸ்தானில் 3427 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3071 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.