நிவாரணஉதவி கேட்டவர்களிடம் பஞ்சப்பாட்டு பாடிய நடிகை
1 min read
11.5.2020
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடிகையாக வலம் வருபவர் தான் அந்த பிரபல நடிகை. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்பு கதாநாயகியாக உயர்ந்து தற்போது முன்னணி நாயகியாக இருந்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை, சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முன் வராததால் அதிருப்தியில் உள்ளார்களாம் கோலிவுட்டில்.
அந்த நடிகை வாயில்லா பிராணிகளின் மீது அதிக அன்பு கொண்டவராக அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருவார். அதேசமயம் தற்போது ஊரடங்கு உத்தரவால் சினிமா தொழிலாளர்கள் பலரும் வறுமையில் வாடி வருகின்றனர். இதற்காக நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரிடமும் உதவித்தொகை கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த பிரபல நாயகியும் ஏதாவது செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி விட்டதாம். நம்பர் நடிகை உதவித்தொகை கொடுத்ததால் இந்த நடிகையும் தருவார் என அனைவரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால் சமீபகாலமாக தயாரிப்பாளர்களுக்கும் அந்த நடிகைக்கும் ஏகப்பட்ட புகைச்சல் இருந்து வருகிறதாம்.
அந்த வகையில் இந்த நடிகைக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வருமா என்பதே கேள்வியாகத் தான் உள்ளது. அதனால் சுருட்டிய வரை லாபம் என ஒப்புக் கொண்ட படங்களில் நடித்து சம்பளத்தை வாங்கி சேர்த்து வைத்துக் கொண்டாராம் அந்த நாயகி.
அவரது வட்டாரங்களில், நீங்க ஏதாவது உதவி செய்யலாமே என கேட்டதற்கு, இருக்கிறதையும் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வது என பஞ்சப்பாட்டு பாடினாராம். வாயில்லா பிராணிகளிடம் அக்கறை காட்டுவது போல் உயிருக்கு போராடும் அவர்களின் மீது அக்கறை கொண்டால் நல்லா இருக்கும் என்கிறார்களாம் கோலிவுட் வட்டாரங்களில்.
ஆனால் நடிகைக்கு ஆரம்பத்திலிருந்து சுயநலம் அதிகமாக இருப்பதாகவே பலகாலம் பேசப்பட்டு வந்தார்கள். வயதாகிவிட்டது இனியாவது புத்தி வந்திருக்கும் என நினைத்தார்களாம். ஆனால் நாய் வாலை நிமிர்த்த முடியாது என தெரிந்த பிறகு அமைதியாகி விட்டார்களாம்.