June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

1-ந் தேதி முதல் தமிழகத்தில் ரெயில் வசதி இல்லை; அரசுக்கு சில கோரிக்கைகள்

1 min read

There is no railway station in Tamil Nadu from the 1st; Some demands from the government

21-5-2020

வருகிற 1-ந் தேதி முதல் இந்தியாவில் 200 ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் தமிழகத்திற்கு ஒன்றும் இல்லை

ரெயில் போக்குவரத்து

கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஆனால் பின்னர் ஓரிரு இடங்களில் பஸ்போக்கு வரத்து தொடங்கப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் வருகிற (ஜூன்) 1-ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயிலவே மந்திரி பியூஷ் கோயல் அறிவித்தார்.
ஏ.சி. வசதி இல்லாத ரெயில்தான் இயக்கப்படும் என்றும் அதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

1-ந் தேதி முதல்

அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரெயில்களை நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 200 ரெயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழகத்திற்கான எந்த ரெயில் சேவையும் இடம்பெறவில்லை. 200 ரெயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை தொடங்கி உள்ளது.

இந்த ரெயில்களில் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யப்படும். ஆர்.ஏ.சி, காத்திருப்போர் பட்டியலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். எனினும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் ரெயில்களில் பயணம் செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் நிலை

தமிழகத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாததால் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என்று நம்பலாம். சாதாரண மக்கள் வேலைக்கு செல்ல வேண்டுமானால் அவர்களுக்கு வாகன வசதி செய்து கொடுப்பது அரசின் கடமை. அடித்தட்டு மக்கள் தொடர்ந்து வேலைக்கு சென்றால்தான் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் மேம்படும். எனவே அவர்கள் வேலைக்கு செல்ல போக்குவரத்த வசதி தேவை. சென்னையை பொறுத்தவரை மின்சார ரெயில் சேவை தேவை. ஆந்த ரெயில் சேவையை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும். தினமும் வேலைக்கு செல்வோரின் பெயரை பதிவு செய்து அவர்களை மட்டும் குறிப்பிட்ட ரெயிலில் சென்று வர ஏற்பாடு செய்யலாம். அதேபோல் நகர பஸ்களையும் முன்பதிவு போல் பதிவு செய்த நபர்களை மட்டும் வேலை செல்ல விடலாம்.

தற்போத பலர் விதிமுறையை மிறி பிற மாவட்டங்களுக்கு சென்று வருகிறார்கள். இதற்கான தனியார் வாகனத்தில் மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பிற மாட்டத்திற்கு செல்வோரை கண்காணிக்க முடியவில்லை. எனவே பிற மாவட்டங்களுக்கு அவசியமாக செல்வோர் வசதிக்காக அரசு பஸ்களை இயக்கலாம். இதன் மூலம் முறைகேடாக வெளி மாவட்டத்திற்கு செல்ல முடியாது. கொரோனா பரவலும் கட்டுபடுத்தப்படும்.
இதை தமிழ அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது சாதாரண பொதுமக்களின் கோரிக்கை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.