சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி; பஸ்கள் இயக்கப்படுமா?
1 min read
Permission to operate autos in districts other than Chennai; Will buses be operated?
22-5-2020
சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரம் பஸ்களை இயக்க வேண்டும் என்று சாதாரண மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆட்டோ
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளை முதல்
சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் நாளை (சனிக்கிழமை) முதல் ஆட்டோக்களை இயக்கலாம்,
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாம். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் கட்டுப்படுத்த பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பஸ்கள் இயக்கப்படுமா?
தற்போது ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதால் அதன் கட்டணம் மிக அதிகமாக இருக்கும். இதனால் ஏழைகள் பயன்பெற முடியாது. அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் ஆட்டோவில் போய்வர முடியாது. அவர்களுக்கு பஸ் வசதி செய்ய வேண்டும். மேலும் அத்தியாசிய நிகழ்வுக்கு வெளியே செல்லும் ஏழைகளும் ஆட்டோவில் செல்ல முடியாது.
எனவே அரசு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும். அதேநேரம் பாதுகாப்பான முறையில் கட்டுப்பாடுகளுடன் பஸ்களை இயக்க வேண்டும்.என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.