June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவை வென்ற 100 வயது இந்திய பாட்டி

1 min read

100 year old Indian leady who won Corona

23-5-2020
கொரோனா பாதிக்கப்பட்ட 100 வயது பாட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பூரண குணமாகி வீடு திரும்பினார்.

கொரோனா

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் கிடையாது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியால்தான் அந்த நோயை முறிய,டிக்க வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் சளிக்கான மருந்தோடு சத்து மாத்திரை சத்தான உணவுதான் கொடுக்கிறார்கள்
இந்த நோயால் நோயாளிகள், முதாட்டிகள், குழந்தைகள் ஆகியோர் பாதிக்கப்பட்டால்தான் பயப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவேதான் குழந்தைகளும், முதியவர்களும் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

100 வயது பாட்டி

ஆனாலும் சில நாடுகளில் அபூர்வமாக 90 வயது, 100 வயதை கடந்தவர்களும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதே போன்று இந்தியாவிலும் தற்போது ஒரு மூதாட்டி குணம் அடைந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சாந்தா பாய் என்ற 100 வயது பாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் தற்போது பூரண குணம் அடைந்துவிட்டார். இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வீட்டிற்கு வந்த பாட்டி சாந்தாபாய்க்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 100 வயதிலும் மனஉறுதியோடு கொரோனாவை எதிர்த்து வென்ற சாந்தா பாய்க்கு பலரும் வாழ்த்து கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.