இந்தியாவில் ஒரே நாளில் குரோனாவுக்கு 146 பேர் பலி
1 min read
146 coronal patients died one day in India
26-5-2020
இந்தியாவில் ஓரேநாளில் 146 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா நிலவரம் குறித்த தகவலை மத்திய சுகாதராத்துறை தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலையும் இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
இன்று( செவ்வாய்க்கிழமை)) காலை 9:30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38, 845 ல் இருந்து 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், ஒரே நாளில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,021 ல் இருந்து 4,167 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,721 ல் இருந்து 60, 491 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 80, 722 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மாநில வாரியாக…
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் – 52667
தமிழகம் -17,082
குஜராத் -14,460
டெல்லி – 15,053
ராஜஸ்தான் – 7,300
ஆந்திரா – 3,110
தெலுங்கானா-1,920
கர்நாடகா-2,182
கேரளா-896