June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 170 பேர் பலி

1 min read

Coronation kills 170 in one day

27-5-2020

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 170 பேர் இறந்துள்ளனர்.

170 பேர் சாவு

இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் தினமும் வந்தவண்ணம் இருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தினமும் காலையில் அறிவித்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இன்று (புதன்கிழமை) காலை 9:15 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6387 பேருக்கு கொரோன தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45,380 ல் இருந்து 1,51,767 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 170 பேர் இறந்துள்ளனர். இதானல் பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,167 ல் இருந்து 4,337 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,491 ல் இருந்து 64,426 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 83,004 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 6-வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

மாநிலம் வாரியாக…

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாநிலம் வாரியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டு இருக்கிறது:-

மராட்டியம் – 54,758 (1,792)
தமிழகம் – 17,728 (127)
குஜராத் – 14,821 (915)
டெல்லி – 14,465 (288)
ராஜஸ்தான் – 7,536 (170)
மத்திய பிரதேசம் – 7,024 (305)
ஆந்திரா – 3,171 (57)
கர்நாடகா – 2,283 (44)
தெலுங்கானா – 1,991 (57)
கேரளா – 963 (6)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.