June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இன்றைய (27-ந் தேதி) செய்தி துளிகள்

1 min read
Seithi Saral featured Image

Today’s (27th) news Bits

27-5-2020

*தமிழகத்தில் இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082ஆக அதிகரித்துள்ளது.

*இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது. இன்று இயக்கப்பட்ட 532 விமானங்களில் 39,231 பேர் பயணம் செய்தனர்.

*சிங்கப்பூரில் இன்று மட்டும் புதிதாக 344 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,960ஆக உயர்ந்துள்ளது.

*ஜப்பானில் அமலில் இருந்த தேசிய அவசர நிலையை இன்று முதல் தளர்த்துவதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.

*பிரேசில் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

*மலேசியாவில் இன்னும் சில நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

*கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த பிரபல ஷியா முஸ்லிம் மசூதிகளை ஈரான் மீண்டும் திறந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.