மாணவனை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்து மிரட்டல்
1 min read
6.6.2020
Take the student naked and threaten to take photos
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தவசி கிராமத்தை சேர்ந்தவர் மரம்வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது 16வயது மகன் செங்காடு அரசு ேமல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்தார். அப்போது தன்னுடன் பள்ளியில் படிக்கும் இருங்கல் கிராமத்தை சேர்ந்த பிளஸ்1 மாணவரும், அவரது நண்பரான பிளஸ் 2 மாணவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். இருவரும், தொழிலாளியின் மகனை பைக்கில் அழைத்துக்கொண்டு நாவல் கிராமத்திற்கு சென்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி சென்றவுடன் 2 மாணவர்களும் சேர்ந்து, தொழிலாளியின் மகனிடம், ‘நீ வைத்திருக்கும் பணத்தை கொடு’ எனக்கேட்டு கத்தியால் தாக்கினராம். பணம் இல்லை எனக்கூறியதால் ஆத்திரமடைந்த 2பேரும், தொழிலாளியின் மகனை நிர்வாணப்படுத்தி சரமாரி தாக்கி செல்போனில் போட்டோ எடுத்து, பணம் தராவிட்டால் அவற்றை பேஸ்புக்கில் வெளியிடுவோம் என மிரட்டினராம்.
இதனால் பயந்துபோன தொழிலாளியின் மகன், ‘என்னிடம் பணம் இல்லை, வீட்டில் இருக்கும் லேப்டாப்பை வேண்டுமானால் தருகிறேன்’ என கூறியுள்ளனர். இதனால் 2மாணவர்களும், அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்று ேலப்டாப்பை பறித்தனர். மேலும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால், உனது குடும்பத்தினரையும் நிர்வாணப்படுத்தி சமூக வலைத்தளத்தில் பரவி விடுவோம், வீட்டையும் கொளுத்திவிடுவோம் எனவும் மிரட்டிவிட்டு தப்பினராம்.
இதில் படுகாயமடைந்த தொழிலாளியின் மகன் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தொழிலாளியின் மகன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்ெபக்டர் ராஜ்ஜெயகுமார் வழக்கு பதிவு செய்து பிளஸ்2 மாணவனை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு மாணவனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.