இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு- ஒரே நாளில் 12,881 பேர் பாதிப்பு
1 min read
Corona affected 12.881 over night in India
18-6-2020
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஓரேநாளில் 12,881 பேர் பாதிக்கப்பட்டனர்.
12881 பேருக்கு கொரோனா
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்த வருகிறது. கொரோனா நிலவரம் குறித்து தினமும் காலையில் மத்தய சுகாதார அமைச்சகம் தகலைவ வெளியிட்டு வருகிறது. அதன்படிஇன்று காலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 12881 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,66,946 ஆக உயர்ந்தது.
334 பேர் சாவு
கடந்த 24 மணி நேரத்தில் 334 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12237 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,94,325 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 10215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,60,384 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 116752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் 50193 பேருக்கும், டெல்லியில் 47102 பேருக்கும், குஜராத்தில் 25093 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.