தமிழகத்தில் பாடத்திட்டத்தை குறைக்கும் பணி- அமைச்சர் தகவல்
1 min read
Curriculum Reduction in Tamil Nadu
18-6-2020
தமிழகத்தில் கொரோன ஊடரங்கு காரணமாக பள்ளிக்கூட பாடத் திட்டத்தை குறைக்கும் பணி நடந்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
செங்கோட்டையன்
தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் சில தளர்வுகள் கொண்டு வந்தாலும் பள்ளிக்கூடம் திறப்பதற்கு அனுதி இல்லை. தற்போது 10-ம் தேர்வு முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பிளஸ-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.
மூடப்பட்டிருக்கும் பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்று இன்னும் தெரியவில்லை. கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் மத்திய அரசு அறிவுத்தலின் பேரில்தான் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்.
தாமதமாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்பதால் முழு பாடத்தையும் சொல்லிக் கொடுக்க முடியாது.
இதுபற்றி தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதவாது:-
பிளஸ்-2 தேர்வு முடிவு
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெறுகிறது. சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து குறித்து முதல்வர் முடிவெடுப்பார். தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.