இந்திய பகுதிக்குள் அத்து மீறி வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
1 min read
Pakistan drone was shot down in the Indian territory
20-6-2020
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் ட்ரோன் பறந்து வந்தது. அதனை எல்லை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.
ட்ரான்
காஷ்மீர் பகுதிக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்பு நாசவேலைகளை செய்து வருகிறது. தற்போது அதனை இந்தியா முறியடித்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய பகுதிக்குள் ட்ரோன் பறந்து வந்தது. இந்தியாவை உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோனை எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர்.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் உள்ள ரதுவா பகுதியில் உள்ள வயல்வெளியில் இந்த ட்ரோன் வீழ்த்தப்பட்டது.
ஆய்வு
அந்த ட்ரோனை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான விரிவான அறிக்கையை எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட உள்ளது.
எல்லைப்பகுதியில் உள்ள இந்திய வீரர்களை கண்காணித்து, பாதுகாப்பு இல்லாத இடங்களில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுபோன்று ட்ரோன்களை பயன்படுத்தி உளவு பார்க்கின்றனர்.
குறிப்பாக ஹிராநகர் செக்டார் எப்போதுமே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஒரு ஊடுருவல் பாதையாக இருந்து வருகிறது. அதன் நிலப்பரப்பு மற்றும் மழைக்காலங்களில் பாகிஸ்தானுக்கு பாயும் சிறு ஓடைகள் பயங்கரவாதிகளுக்கு சாதகமாக உள்ளன.