நெல்லையில் கொரோனாவுக்கு லாரி புரோக்கர் பலி
1 min read
நெல்லையில் கொரோனாவுக்கு லாரி புரோக்கர் பலி
Larry Broker kills Coronaசாவு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
22.6.2020
நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் முதல் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மாநில அரசு அறிவித்த பட்டியலில் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 428 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 208 பேர் சிகிச்சையில் இருந்தனர்.
இந்நிலையில் நெல்லை அருகே கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த 61 வயதுடைய லாரி புரோக்கர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு முதலில் எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் சளி மாதிரிகளில் கொரோனா ‘நெகட்டிவ்’ என வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 17ம்தேதி அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு அவருக்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது.
இதையடுத்து மருத்துவக்குழுவினர் செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்திருந்த நிலையில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்ந்துள்ளது.
இவர் குடியிருக்கும் பகுதி மானூர் சுகாதார வட்டாரத்தின் கீழ் வருவதால் அப்பகுதியை சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று அவரது உடலை மிகவும் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையே நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்ட சுமார் 20 பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர்.