கொரோனா இறப்பை குறைக்கும் டெக்சாமெத்தசோன் மருந்து; அதிகமாக உற்பத்தி செய்ய பரிந்துரை
1 min read
Dexamethasone drug to reduce coronal death; Recommended to produce too much
23-6-2020
கொரேனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு டெக்சாமெத்தசோன் மருந்தை கொடுத்து இறப்பை குறைக்கலாம் என்றும் எனவே அந்த மருந்தை அதிக அளவில் தயாரிக்க சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மருந்து
உலக நாடுகள் கொரோனாவைக் கண்டு பெரும் பீதி அடைந்து உள்ளது. அதற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை.
அதற்காக உலக நாடுகள் மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன. ஆனால், இதுவரையில் கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் அதிகாரப்பூர்வ மருந்து இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் டெக்சாமெத்தசோன் மருந்து, தீவிர பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளின் இறப்பை 35 சதவீதம் அளவிற்கு குறைத்துள்ளதாக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகமாக தயாரிக்க பரிந்துரை
இதனையடுத்து இந்த டெக்சாமெத்தசோன் மருந்தை தீவிர கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் அதிக அளவில் தயாரிக்குமாறு சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து இந்த மருந்துக்கான தேவை, உலக அளவில் அதிகரித்துள்ளது. மேலும், மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தீவிர நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து பலனளிக்கும் என்றும், தொடக்க நிலையில் உள்ளவர்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.