பணத்துக்கு ஆசைப்பட்டு ராத்திரியில் வீடியோ காலில் பேசி சிக்கலில் மாட்டிய நடிகை
1 min read27.6.2020
Actress who got into trouble by talking video footage at nightகடந்த சில தினங்களாகவே அந்த பிரபல நடிகையை மர்ம கும்பல் மிரட்டி பணம் பறித்த செய்திதான் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் அந்த பிரச்சனைக்கு காரணம் முழுக்க முழுக்க அந்த நடிகைதானாம்.
அந்த நடிகை ஏற்கனவே பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வரும் நிலையில் துபாயில் 4 எண்ணெய் கிணறுகள் இருக்கிறது, இரண்டு விமானங்கள் தங்களது பெயரில் இருக்கிறது, இரண்டு கப்பல் ஓடுது என்று கூறி சமூக வலைதள வழியாக ஒரு பார்ட்டி நடிகையிடம் வந்துள்ளது.
நடிகையும் பணத்துக்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் வலிய வந்ததை விட வேண்டாம் என அவர்களிடம் கடலை போட்டுள்ளார். நாளுக்கு நாள் அவர்களது பேச்சு முற்றி நடிகை வீடியோ கால் பேசும் அளவுக்கு வந்து விட்டார்.
அதுவும் சாதாரண வீடியோ கால் இல்லை. கில்மா கலந்த வீடியோ கால். அந்த வீடியோ காலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அந்த நடிகையின் வீடு மற்றும் நகை பணம் உள்ளிட்டவற்றை நோட்டமிட்டுள்ளனர்.
இது தெரியாமல் மொத்தத்தையும் திறந்து காட்டிய அந்த நாயகியை நோட்டம் செய்த மர்ம நபர்கள், மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளனர். முதலில் காவல்துறையிடம் செல்ல தங்கியுள்ளார் அந்த நாயகி.
ஆனால் அவரது அம்மா இந்த நாயகி பண்ணிய தில்லுமுல்லு தெரியாமல் போலீஸாரிடம் கம்ப்ளைன்ட் செய்துவிட்டாராம். அவர்கள் விசாரணை செய்தபோது தான் இந்த நடிகையின் கில்மா மேட்டர் வெளியில் தெரிய வந்துள்ளது.
டென்ஷனான காவல்துறையினர், பணத்துக்கு ஆசைப்பட்டு நீங்களே எல்லாத்தையும் காட்டிவிட்டு, தற்போது எதற்கு நடிக்கிறீர்கள் என வெளுத்து வாங்கி விட்டார்களாம். இனி சினிமாவில் எப்படி தலைதூக்க போகிறேன் என வருத்தப்படுகிறாராம் அந்த நாயகி.