தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா; மேலும் ஒரு எம்.எல்.ஏ. பாதிப்பு
1 min read
DMK MLA Arasu affected for Corona
27-6-2020
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்-
எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வான பழனி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வருகிறார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர், சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்.
சென்னை
சென்னையில் நேற்று(வெள்ளிக்கிழமை) வரை, 49 ஆயிரத்து, 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டு உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைந்து வருவதும அதிகரித்து வருகிறது. சென்னையில் இதுவரை, 28 ஆயிரத்து, 823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 ஆயிரத்து, 136 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 730 பேர் இறந்துள்ளனர்.
ராயபுரம்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ராயபுரத்தில், 7,211 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 5,989 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5,655 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலியில் 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்
இன்று(சனிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3,414 ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 400 ஆக அதிகரித்து உள்ளது. இந்த மாட்டத்தில் நன்னிலம் மதுவிலக்கு பிரிவில் 4 பெண் போலீஸ் உட்பட 5 போலீசார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் ஒருவர் உள்பட 60 பேர் இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கும், செங்கல்பட்டில் 226 பேருக்கும், திருவள்ளூரில் 137 பேருக்கும், விருதுநகரில் 58 பேருக்கும். புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை
சென்னையில் இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்தனர். மதுரை அரசு கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். மதுரையில் 195 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுச்சேரியில் இன்று புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது.
22 பேர் பலி
சென்னையில் இன்று (சனிக்கிழமை) மட்டும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 22 பேர் இறந்துள்ளனர். இவர்களில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் தலா 6 பேரும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அபராதம்
தமிழகத்தில் ஊரடங்கை மீறியது தொடர்பாக 6,82,385 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.15.65 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறிய 5,55,806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, தடையை மீறி வாகனங்களில் சுற்றியதாக 7,44,688 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.