சென்னை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
1 min read
Police sub-inspector commits suicide near Chennai
30-6-2020
சென்னை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சப்-இன்ஸ்பெக்டர்
சென்னை அருகே வண்டலூர் கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஊனமாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கிஷோர் (வயது 51). இந்த பகுதி செங்கல்பட்டடு மாவட்டத்தைச் சோந்தது.
கிஷோருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.
கடந்த 8-ந்தேதி முதல் ஆவடியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததா க கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த அவர், வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.
தற்கொலை
.
அதன்பிறகு வெகு நேரமாக கதவை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கிஷோர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய கிஷோரின் உடலை கீழே இறக்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக கிஷோர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணி இடமாறுதல் காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.