காரிய வெற்றிக்கு வாமன வழிபாடு
1 min read
Vamana valipaadu for anything succes
ஆனி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் துவாதசியை வாமன துவாதசி என்று அழைப்பர். அன்றைய தினம் விஷ்ணுவின் அவதாரமான வாமனரை வழிபட்டால் கல்வி பெருகும். மேலும் காரிய அனுகூலம் ஏற்படும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் மனோதிடம் ஏற்படும். இந்த வழிபாட்டுக்குரிய நாள் ஜூலை 2-ந் தேதி (வியாழக்கிழமை) வருகிறது.