குழந்தைகள் முன்னேற தொட்டில் பூஜை
1 min readCradle Pooja for children to progress
ஆனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை ஏகாதசியை விஷ்ணு சயன ஏகாதசி என்று அழைப்பார்கள். அன்று முதல்தான் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது சயனம் சென்றார். இந்த புனித நாள் ஜூலை 1- ந் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் வீட்டில் ஊஞ்சல் கட்டி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தையை விஷ்ணுவாக பாவித்து அதை தொட்டிலில் படுக்க வைத்து தாலாட்டு பாட வேண்டும். மேலும் அன்றைய தினம் பெருமாள் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடவேண்டும். தீப தானமும் செய்யவேண்டும். இப்படி செய்தால் குழந்தைக்கும், நமக்கும் நல்லது. ஞானமும் செல்லவமும் கிடைக்கப்பெறலாம்.