ஆதரவாக இருப்போம்- அமெரிக்கா அறிவிப்பு
1 min read
We’ll be in support of – US announcement
8-7-2020
சீனாவுடனான பிரச்சினையில் நாங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
சீனா
பாகிஸ்தான் மட்டுமின்றி நம்மை சீனாவும் அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறது. பாகிஸ்தான் பங்கரவாதிகளை அனுப்பி நாச வேலையில் இறங்கி வருகிறது என்றால் சீனா நம் நிலத்தை ஆக்கிரமிப்பதில் குறியாக இருக்கிறது.
அந்த நாடுதென் சீன கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி பிலிப்பைன்ஸ் புரூனே தென் கொரியா ஜப்பான் ஆகிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து தென் சீன கடல் பகுதிக்கு அமெரிக்கா தன்னுடைய விமானப் படையின் 2 போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த விமானங்கள் அங்கு போர் பயிற்சியில்ஈடுபட்டு வருகின்றன.
இதுபற்றி அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் கூறியதாவது:-
இந்தியாவுக்கு ஆதரவு
சீன ராணுவத்தால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களின் 59 செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. இந்தியா எடுத்த இந்த நடவடிக்கை மிகவும் சரியானதுதான்.
இந்தியா – சீனாக்கு இடையேயான பிரச்சினையில் அமெரிக்கா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும். அந்த நாடுகளுக்கான பிரச்னை மட்டுமல்ல உலகின் எந்த பகுதியில் பிரச்சினை நடந்தாலும்பலமான நட்புறவின் அடிப்படையில் அமெரிக்க ராணுவம் செயல்படும். உலகில் உள்ள எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டை அடக்கி அதிகாரம் செலுத்த நினைத்தால் அதைஅமெரிக்க ராணுவம்அனுமதிக்காது.
உலகிலேயே சக்தி வாய்ந்த ராணுவம் அமெரிக்க ராணுவம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்புகிறோம். அதனால் தான் தென் சீன கடல் பகுதிக்கு எங்கள் போர் விமானங்களை அனுப்பியுள்ளோம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ராணுவத்தை மேலும் பலப்படுத்த அதிகம் செலவிட முடிவு செய்துள்ளார்.
கடுமையான தடைகள்
சீனாவுக்கு எதிராக சில கடுமையான தடைகளை விதிக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். தங்களுக்கு அருகேஉள்ள எல்லா நாடுகளையும் ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. எனவே அந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவுடன் நட்புறவு வைத்துக் கொள்ள முடிவு செய்து உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.