இந்திய ரயில்வே 100 சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
1 min read
100% electrification of Indian Railways: Prime Minister approves
12-7-2020
இந்திய ரெயில்வேயை நூறு சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
இந்திய ரெயில்வேயை நூறு சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில் ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் உள்ள 1,20 ஆயிரம் கிலோ மீட்டர் முழுவதையும் நூறு சதவீதம் அளவிற்கு மின்மயமாக்கல் ஆக்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து உள்ளார்.
வரும் 2030 ம் ஆண்டில் உலகின் முதல் 100 சதவத பசுமை ரெயில்வேயாக மாற்ற விரும்புகிறோம்.
வரலாற்று ரீதியாக இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்து உள்ளது. தற்போதைய சூழலில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன.
அதே நேரத்தில் விரைவாக முன்னேறக்கூடிய திறனை நாங்கள் காட்டி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.