May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவால் இறந்த டாக்டர் மூலம் 5 பேருக்கு தொற்று; டியூசன் சென்ற பேத்தியால் ஆசிரியைக்கும் பாதிப்பு

1 min read


5 infected by a doctor who died of coronavirus

12-7-2020

கும்பகோணம் அருகே கொரோனாவால் இறந்த டாக்டரின் பேத்தி டியூசனுக்கு சென்ற வீட்டில் கணவன், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

டாக்டருக்கு கொரோனா

கும்பகோணம் பக்தபுரி தெருவைச் சேர்ந்த பிரபல பெண் டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்ககப்பட்டு கடந்த 6-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து  டாக்டரின் மருமகள், பேரன் மற்றும் பேத்திக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

டியூசன் ஆசிரியை

\

இதில்  டாக்டரின் பேத்தி பெரும்பாண்டி பஞ்சாயத்தில் உள்ள ஆசிரியை ஒருவரிடம் டியூஷன் சென்று வந்துள்ளார்.

அந்த ஆசிரியைக்கு நடத்தப்பட்ட சோதனையில் டியூஷன் பயிற்றுவித்த ஆசிரியைக்கும், அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் வசித்த சித்தி விநாயகர் தெரு தடை செய்யப்பபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பெயருக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

கொரோனா பாதிக்கப்பட்ட சிறுமிக்கு டியூசன் எடுத்த வீடு அமைந்துள்ள பெரும்பாண்டி சகாஜி நாயக்கன் தோப்பு பகுதியில் கிருமி நாசினியும் தெளிக்கப்படவில்லை, அந்த சிறுமியுடன் டியூசன் படித்த மற்ற மாணவ, மாணவிகளின் விவரத்தை சேகரித்து கொரோனா பரிசோதனை ஏதும் நடத்தப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நகர் புறங்களில் காட்டும் வேகத்தை சுகாதாரத்துறையினர் கிராமப்புறங்களில் காட்டுவதில்லை என்றும் கூறுகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.