காமராஜருக்கு ஏன் தனிப்பெருமை?
1 min read
Why is it special for Kamaraj?
15-7-2020
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் இன்று. காமராஜரின் சேவைகள், திறமைகள், ஆளுமைகள் எல்லாம் தெரிந்த விசயம்தான். அவர் எளிமையானவர் என்பதால் மட்டும் அவருக்கு பெருமை அல்ல. காரணம் அவரை போல எளிமையானர்கள் என சிலரை அடையாளம் காட்டலாம். அவர் சிறந்த ஆளுமைக் காரர் என்பதால் மட்டும் அவருக்கு பெருமை அல்ல. காரணம் சிறந்த அரசியல் சாணக்கியத்தனம் உள்ள அரசியல்வாதிகளும் இருந்திருக்கிறார்கள்.
ஏழைகள் மீது அன்பு கொண்டவர் என்பதால் மட்டும் அவருக்கு பெருமை என்று கூறமுடியாவது. ஏனென்னால் பல தலைவர்கள் ஏழைகள் பால் அன்பு செலுத்தினார்கள். உறவை உதறி தள்ளியர் அவர் மட்டுமல்ல…. இன்னும் சிலரும் உண்டு.
சமயோசிதவாதி என்பதால் மட்டும் அவருக்கு பெருமை அல்ல. காரணம் ஒருசிலர் சிறந்த சமயோசிதவாதியாக இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இத்தனை பெருமைகளையும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் பெருந்தலைவர் காமராஜர்தான்.
அவருக்கு முதல் ஆசை பள்ளிக்கூடங்களை அதிகம் திறக்க வேண்டும் என்பதுதான். திறந்தார். பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை வரவழைக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். குழந்தைகள் பள்ளிக்கு படையெடுக்க ஆரம்பித்தன. அப்போது சிந்தித்தார்… இந்த குழந்தைகள் இன்னும் பத்தாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்துவிமே… அவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டுமே என நினைத்தார். எனவே அடுத்த கட்டமாக தொழிற்சாலைகளை திறக்க ஆயத்தமானானர்.
இதேபோல்தான் வவசாயம் மேம்பட அணைகள் பலவற்றை கட்டினார்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இதுதான் மற்ற தலைவர்களில் இருந்து இவர் தனிச்சிறப்போது பேசப்படுகிறார்.
- கடையம் பாலன்.