கொரோனாவுக்காக நடிகை ஐஸ்வர்யா ராய், மகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
1 min read
Actress Aishwarya Rai has been admitted to hospital with her daughter for Corona
17-7-2020
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா
இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் மும்பை நானாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனால் அமிதாப் பச்சனின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
ஆஸ்பத்திரியில்…
இந்த நிலையில் இன்று நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.