சென்னையில் மெட்ரோ ரெயிலை இயக்க நடவடிக்கை
1 min read
Metro rail operation in Chennai very soon
20-7-2020
சென்னையில் மெட்ரோ ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து ரத்து
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரம் முதல் ரத்து செய்யப்பட்டது.
ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டதால் சென்னையில் ரெயில் போக்குவரத்துபோல் மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் தொடர்ந்து இயங்காமல் இருந்து வருகிறது.
சென்னையில் போக்குவரத்து சேவை எப்போது தொடங்கப்படும் என்று இதுவரை எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் இயங்க ஆரம்பித்துவிட்டன. அங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் தங்கள் வாகனங்கள் அல்லது குழுவாக வாகனத்தை அமர்ந்து சென்று வருகிறார்கள். அந்த வகையில் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கணிசமாக ஓடத் தொடங்கிவிட்டன.
நடவடிக்கை
அதே நேரம் பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாததால் சாதாரண தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வர சிரம்பப்படுகிறார்கள்.
அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, சென்னையில் முதல்கட்டமாக மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களாக கோயம்பேடு – சென்னை விமான நிலையம் வழித்தடத்தில் அவ்வப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.