அதிக மின்கட்டணத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்
1 min read
MK Stalin demonstration against high electricity tariffs
21-7-2020
தமிழகத்தல் அதிக மின்கட்டணம் வசூலிப்பதாக கூறி தி.மு.க. தவைர் மு.க.ஸ்டார் கறுப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
மின்கட்டணம்
தமிழ்நாட்டில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் இணைப்புகளுக்கு கணக்கு எடுக்கப்படும். வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசம்.
மின்கட்டணம்
கொரோனா ஊரடங்கால் தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்புக்கான கணக்கீட்டை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. பயனீட்டாளர்கள் கடந்த முறை கட்டிய கட்டணத்தை கட்டலாம் என்றும், கண்கெடுத்தப்பின் அந்தத் தொகை கழித்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மின்கணக்கு எடுப்பவர்கள் சேர்த்து கணக்கெடுத்ததால் வழக்கத்தை விட கூடுதலாக யூனிட் வருகிறது. 100 யூனிட் வரை இலவசம் என்ற நிலையில் சேர்த்து கணக்கெடுத்ததால் பலரது வீடுகளில் 100 யூனிட்டுக்கு மேலே சென்றுவிடுகிறது. இதனால் இதுவரை மின்கட்டணம் செலுத்தாதவர்கள்கூட இப்போது மின்கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
மேலும் பருக்கு இரண்டு மடங்கு மூன்று மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க. போராட்டம்
தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் கறுப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டின் முன்பு கறுப்பு கொடி ஏற்றி, கறுப்பு சட்டை அணிந்து மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அதேபோல் தி.மு.க. எம்.பி. கனிமொழி சி.ஐ.டி. காலனியில் உள்ள தன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்., அண்ணா அறிவாலயத்தில் தயாநிதி மாறன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
தடையை மீறி….
வேலூர் மாவட்டம் காட்டியில் உள்ள வீட்டில் துரைமுருகன் மற்றும் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் தடையை மீறி மின்வாரிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.